அமைச்சர் தகவல் புதுக்கோட்டை, ஜன.20 - தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின்கீழ், 3-வது மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னர் அமைச்சர் தெரி வித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு மருத்துவ மனைகள், அரசு சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட படுக்கை வசதி கொண்ட கட்டிடங்கள், அவசர சிகிச்சை பிரிவுகள், கூடுதல் ஆய்வக உபகரண வசதி கள், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., இரத்த வங்கி ஆய்வகங்கள், கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவைகள் குறித்து பெறப்பட்டு, மாவட்ட சுகாதார பேரவை மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். நகர்ப்புற சுகாதார சேவைகளை மேம்படுத் திடும் விதமாக ஏற்கனவே உள்ள இரண்டு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களுடன் கூடுதலாக ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அசோக் நகர் பகுதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. காமராஜபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகா தார மையத்திற்கு ரூ.60 லட்சம் செலவில் கூடு தல் கட்டிடங்களும், மச்சுவடி மற்றும் ராஜ கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் புதிய இரண்டு நகர்ப்புற துணை சுகாதார நிலை யங்கள் ரூ.60 லட்சம் செலவில் கட்டி டங்களும் அமைக்க பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அறந்தாங்கி நகராட்சிப் பகுதியில் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள், புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் ஒன்று 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க பணிகள் துவக்கப்பட்டுள்ளன. புதுக் கோட்டை மாவட்டத்தில் 3 அரசு மருத்துவ மனைகள் தேசிய தரச் சான்றிதழ் பெற்று உள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 32,126 பயனாளிகள் பயன டைந்துள்ளனர். மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ், 2023 ஆம் ஆண்டில் 20,849 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12.98 கோடியும், 2023-24 ஆம் ஆண்டில் 18,073 கர்ப்பிணி பெண் களுக்கு ரூ.10.80 கோடியும் மகப்பேறு உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பி னர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை) மரு.வை.முத்துராஜா (புதுக்கோட்டை) கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.இரா.மணி, இணை இயக்கு நர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி கள்) மரு.சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் திலக வதி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.