districts

img

சிபிஎம் அறந்தாங்கி ஒன்றியச் செயலாளராக நாராயணமூர்த்தி தேர்வு

அறந்தாங்கி, ஆக.29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறந்தாங்கி தாலுகா குழு சிறப்பு பேரவை  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரயில்வே பீடர் சாலை நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் தென்றல் கருப் பையா தலைமை வகித்தார். செப்டம்பர் 7  நாடு தழுவிய மறியல், மாநில கட்டிட நிதிக்கு கட்சி உறுப்பி னர்களின் பங்களிப்பு குறித்து நடைபெற்ற சிறப்பு பேரவை யில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் துவக்க உரையாற்றினார்.  இதில், கட்சியின் அறந்தாங்கி ஒன்றியச் செயலாளராக நாராயணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். தீக்கதிர் 4 ஆண்டு சந்தா, 2 அரையாண்டு சந்தாக்களை மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மனிடம் ஒன்றியச் செயலாளர் வழங்கினார். மாவட்டச் செயலாளர் கவிவர்மன் நிறைவுரையாற்றினார்.