districts

நாங்குநேரி சம்பவம் 6 சிறார்கள் மீது வழக்குப்பதிவு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக ரூ.2 லட்சம் உதவி

மதுரை, ஆக.13-

    திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரியில் சின்னதுரை என்ற பள்ளி மாணவர் கொடூரமாகக் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஆறு சிறார்கள் மீது காவல்துறையினர் குற்ற எண் 251/2023-ன் கீழ் தீண்டாமை வன்கொ டுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், இந்தியத் தண்ட னைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுக ளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.

     வழக்குப் பதிவு செய்யப் பட்டவர்களின் விவரம்: முருகன் மகன் சுப்பையா (17), செல்லையா (எ) செல்லத்துரை மகன் செல்வ ரமேஷ் (16), முருகேசன் மகன் சுரேஷ்வானு (16), முருகன் மகன் செல்லதுரை (17), சரவணன் மகன் வான்முத்து (17),  சுடலைக்கண்ணு (எ) அய்யா சுடலைக் கண்ணு மகன் கல்யாணி (17) ஆகி யோர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

     இந்த நிலையில் திங்களன்று மேலும் ஒரு சிறாரைக் கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையில் திருநெல்வேலி யில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நட வடிக்கை எடுத்துள்ளது. குழந்தைகள் கல்வி தடைபடாத அளவில் நடவ டிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

     அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துணை நிற்கும் எனவும் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார்.

     பாதிக்கப்பட்ட மாணவரின் குடும் பத்திற்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.