நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் வை.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில், கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலியை சந்தித்து வாழ்த்து பெற்றார். சிபிஐ நாகை மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.