districts

img

நூற்றாண்டை நிறைவு செய்த அரசுப் பள்ளியில் திறனறி வகுப்பை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், செப்.24- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் நூற்றாண்டு கண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திறனறி வகுப்பை நாகைமாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கீழ்வேளூர் பேரூராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,  இந்தாண்டு அதன் நூற்றாண்டை நிறைவு செய்கிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள்  மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம்,  பள்ளி மேலாண்மை குழு, தலைமை ஆசிரி யர், ஆசிரியர்கள்,  மாணவ-மாணவியர்கள் சார்பில் பள்ளியில் நூற்றாண்டு விழா நடை பெற்றது.  பள்ளியின் நூற்றாண்டு விழா மலரை, மீன்  வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் வெளியிட்டார். அதை தாட்கோ தலைவர் உ.மதிவாணன் பெற்றுக் கொண்டார். இப்பள்ளியின் திறனறி வகுப்பை (ஸ்மார்ட்  கிளாஸ்) கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்து வாழ்த்துரை ஆற்றினார். இந்நிகழ்வில் ஆண்டு விழா தலைவர் ப. ஜெயக்குமார், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.