நாகப்பட்டினம், மார்ச் 9- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட ஊராட்சிகளை இணைக்கும் வகையில் புதிய வழித்தடத் தில் பேருந்து சேவையை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி தொடக்கி வைத்தார். நாகப்பட்டினம், சிக்கல், கீழ்வேளூர் வழி யாக தேவூர், வலிவலம் வரை புதிய வழித் தடத்தில் தொடங்கப்பட்ட இப்பேருந்து சேவை, மீண்டும் நாகை சென்றடைந்து, தஞ்சாவூர் வரை சென்று வரும். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சிபிஎம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், திமுக கீழ்வே ளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பா. கோவிந்தராஜ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.