districts

img

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளங்கள் அம்பானி கைக்கு போகும்!

கும்பகோணம், ஏப்.13- நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி, இந்தியா கூட்டணி கட்சி களின் சார்பில் மயிலாடுதுறை நாடா ளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதா  போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு இடங்களில் பிரச்சா ரம் செய்து வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி, மயிலாடுதுறை நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட திருவி டைமருதூர் சட்டமன்றத் தொகுதி யில் திருப்பனந்தாள், திருவிடை மருதூர், நாச்சியார்கோவில் ஆகிய  பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்  சுதாவை ஆதரித்து கை சின்னத் திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது நாகைமாலி எம்எல்ஏ பேசுகையில், “மயிலாடுதுறை நாடா ளுமன்ற தொகுதிக்குட்பட்ட திரு விடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, திராவிட இயக்கமும், பொதுவுடமை  இயக்கமும் சேர்ந்து முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி போன்ற ஜவான்கள் களமாடிய மண். அத னால் இத்தொகுதியில் இந்தியா  கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது.  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. 10 ஆண்டுகளில் பாஜகவினர் என்ன செய்தார்கள் என்று அவர் களால் ஒன்றுகூட சொல்ல முடியாது.  மோடி அரசு நீடித்தால், விவசாய நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வளங்களும், சட்டத்தின் மூலம்  அம்பானியின் கைக்கு போய்விடக் கூடும்.  நாட்டில் குறுந்தொழில், சிறு தொழில், பெருந்தொழில் ஆகியவை அழிந்துவிட்டன. அதேபோல மயி லாடுதுறை தொகுதிக்குட்பட்ட நாச்சி யார்கோவில் கிராமத்தில் புவிசார் குறியீடு பெற்ற குத்து விளக்கு தயா ரிக்கும் தொழில் நடைபெற்றது. ஆனால் அதற்கு ஜிஎஸ்டி என்ற பெய ரில் மோடி அரசு போட்ட திட்டத்தால்,  தொழில்கள் மிகவும் நலிவடைந்து உள்ளன.  வேலையில்லாததால், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் கள் ஏராளமானோர் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்து  வந்தனர். அதற்கும் ஜிஎஸ்டி வரி  போட்டதால், அத்தொழிலும் நலிவ டைந்து விட்டது. இதற்கு மோடி  அரசு இட்ட பெயர் சேவை வரியாம்.  மோடி அரசு இளைஞர்கள் அனை வருக்கும் வேலை வழங்கப்படும் என்றது, ஆனால் இருந்த வேலை யும் பறிபோனதுதான் மிச்சம்.  பாஜகவும் அதிமுகவும் தேர்த லுக்குப் பின் ஒன்றாகவே போய் விடு வார்கள். தற்போது இருவரும் தனி யாக இருப்பது, அவர்களின் கபட நாடகம். எனவே பொதுமக்கள் வேட்பாளர் சுதாவுக்கு கை சின்னத் தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்டச்  செயலாளர் சின்னை.பாண்டியன், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி  பொறுப்பாளர் சி.ஜெயபால், அரசு  தலைமை கொறடாவும் திருவிடை மருதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பி னருமான கோவி.செழியன், திருப்ப னந்தாள் ஒன்றிய திமுக செயலாளர் கோ.க. அண்ணாதுரை, சிபிஎம் ஏ.எஸ். பாரதி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் திமுக ஜெய பால், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பி னர்கள், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முருகன் மற்றும் கூட்டணி  கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.