districts

img

மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் முத்தமிழ் விழா

தஞ்சாவூர், மார்ச்.14 -  தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் முத்தமிழ் விழா, கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா,  கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மேனாள் மருத்துவக் கல்வி இயக்குநர் முனைவர் ஏ.எல்.மீனாட்சி சுந்தரம் சிறப்புரையாற்றினார். திரைப்பட பின்னணி பாடகர் முகேஷ், பின்னணி பாடகி மாலதி லெட்சு மணன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  பேராசிரியர்கள் ஜெனிட்டா, கி.உஷா உள்ளிட்ட பேரா சிரியர்கள், கல்லூரி மேலாளர் இரா.கண்ணன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவர் வீ.வெற்றிவேல் வரவேற்றார். நிறைவாக, உயிர்வேதியியல் துறைத் தலைவர்  இராமமூர்த்தி நன்றி கூறினார்.