districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கான பன்னோக்கு உயர்தர பரிசோதனை மருத்துவ முகாம்

தஞ்சாவூர், நவ.19 -  தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மைப்  பணியாளர்களுக்கான பன்னோக்கு உயர்தர பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் சனிக் கிழமை நடைபெற்றது. இதில் 43  பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் மு.கரு ணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இணைந்து, சிறப்பு பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக நடத்தின. முகாமினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாநகராட்சி ஆணையர் இரா. மகேஸ் வரி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பன் னோக்கு உயர்தர மருத்துவ பரி சோதனைகள் மற்றும் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. இதயம், நுரை யீரல், கண், பல், எலும்பு மூட்டு, இயன்முறை, தோல், காது, மூக்கு, தொண்டை, மனநலம், வாழ்க்கை நடைமுறை மாற்ற நலவாழ்வு மையம், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம், பாத பரிசோதனை மையம் உள்ளிட்ட மருத்துவப் பிரிவுகளும், ஹீமோகுளோபின், ரத்த  வகை கண்டறிதல், இரத்தச் சர்க்கரை  அளவு, ரத்த கொழுப்பு அளவு, பித்த  நிறமி, யூரியா, கிரியாட்டினின், எச்.ஐ.வி, சளி மாதிரி பரிசோதனை, இசிஜி ஸ்கேன், கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மருத்துவ  குழுவினரால் 250 தூய்மை பணியா ளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு மருத்துவர்களால் ஆலோச னைகள் வழங்கப்பட்டன.  இதில் 43 தூய்மை பணியாளர் கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். முகாமில் பங்கேற்ற  தூய்மைப் பணியாளர்களுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாப் பழம், வாழைப்பழம், நெல்லிக்காய்,  ஊட்டச்சத்து பொடி, உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி உள்ளிட் டவை அடங்கிய “நலவாழ்வு பைகள்”  வழங்கப்பட்டன. மேலும், நிலவேம்பு  குடிநீர், மூலிகை தேநீர், பானகம், சிவப்பு அவல், முளைகட்டிய பயிர் வகைகள், முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டன. மது மற்றும் புகை பழக்கத்தி னால் ஏற்படும் தீமைகள் குறித்தும் புகையிலை உட்கொள்வதால் ஏற்ப டும் தீமைகள் குறித்தும் விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.