மயிலாடுதுறை, மே9-
மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் சர்மிளா காடஸ் எஸ். எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டா மிடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய 39 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர் குகராஜ் 591 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றார். பள்ளி அளவில் மாணவி சுகைலா 583 மதிப்பெண்கள் பெற்று இரண்டா மிடம், செல்வகாந்தன் 582 மதிப்பெண் பெற்று மூன்றா மிடம் பெற்றுள்ளனர். இயற்பியலில் ஒரு மாணவரும், வேதியியல் பாடப்பிரிவில் நான்கு மாணவர்களும், உயிரி யல் பாடப்பிரிவில் இரண்டு மாணவர்கள் 100 மதிப்பெண் கள் பெற்றுள்ளனர். 29 மாணவ, மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.