பெரம்பலூர்,அக் .16- பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் தொழி லாளர்களில் 5 பேரை தொழிற்சாலை நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்ததோடு 15 பேரை பணி நீக்கம் செய்வதற்கு நோட்டீஸ் வழங்கியுள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் 16 அன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் செல்லாமல் தொழிலாளர் கள் பணி நீக்கம் செய்யப் பட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் ஆலையில் செயல்படும் கேண்டீனில் தரமான உணவு வழங்காததை கண் டித்தும், பணிநீக்கம் செய் யப்பட்ட தொழிலாளர் களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தொழிற்சாலை முன்பு நூற் றுக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்ட செயலா ளர் ராஜேந்திரன் ஆகி யோர் தொமுச நிர்வாகி களுடன் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரி வித்துடன் தொழிலாளர் களின் போராட்டம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர்.