districts

ஆரம்ப சுகாதார நிலையப் பணிக்கு எம்.பி., அமைச்சர் அடிக்கல் நாட்டினர்

புதுக்கோட்டை, அக்.22 - புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த கொத்தமங்கலத்தில், மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிக்கு, முன்னாள் ஒன்றிய  நிதி அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம் பரம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா உள்ளிட்ட  அதிகாரிகள் பங்கேற்றனர்.