வைகோ சாடல் புதுக்கோட்டை, ஏப்.10 - நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டு சர்வாதி காரியாக மாறுவதற்கு மோடி ஆசைப் படுகிறார் என்றார் மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழக பொதுச் செய லாளர் வைகோ. இந்தியா கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டி யிடும் துரை.வைகோ-வுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு கந்தர்வ கோட்டை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது: பிரதமர் என்ற உயர்ந்த பதவிக்கு தகுதியில்லாதவராக மோடி இருக் கிறார். தரம் தாழ்ந்த அவரது பேச்சு மக்களை முகம் சுழிக்க வைக்கிறது. தமிழ்நாட்டுக்கே வந்து திராவிட இயக் கத்தை அழித்து விடுவேன் என்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டு சர்வாதிகாரி யாக மாறுவதற்கு மோடி ஆசைப்படு கிறார். இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்தத் தேர்தலில், அவர்கள் அதிக இடங்களைப் பெற்றுவிட்டால் அம்பேத் கர் இயற்றிய அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள். மனுதர்மத்தை அரசியல் சட்டமாக மாற்றி விடுவார்கள். நாட்டின் தலைநகர் தில்லியை, வாரணாசிக்கு மாற்றி விடுவார்கள். இதையெல்லாம் எண்ணிப்பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இயற்கை பேரிடர் காலங்களில் எட்டிப் பார்க்காத மோடி இன்றோடு 7 முறை தேர்தலுக்காக தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். 7 முறையல்ல, 70 முறை வந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மாற்றத்தையும் அவரால் கொண்டு வர முடியாது. இவ்வாறு அவர் பேசினார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், முன்னாள்எ எம்எல்ஏ கவிதைப்பித்தன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோ கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.