அமைச்சர் எஸ்.ரகுபதி சாடல் புதுக்கோட்டை, மார்ச் 2 - தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியின் தரம்தாழ்ந்த விமர்சனம் அவரின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகு பதி. புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்கள் இயக்கத்தில் தவறு செய்தவர்கள் தலைமையின் கவனத் திற்கு கொண்டு செல்லப்பட்டால் நிச்சயம் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்போம். திமுக எந்தக் குற்றவாளி களையும் கட்சியில் சேர்க்காது. அதே நேரத்தில், பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை தெரிந்து கொண்டேதான் பாஜகவில் சேர்க்கின்ற னர். திமுக கூட்டணிக் கட்சிகளின் பேச்சு வார்த்தை சுமூகமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. எங்கள் கூட்டணியில் பிரச்ச னையை ஏற்படுத்தி அவர்கள் பக்கம் இழுக்கலாம் என்ற எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது. மூன்று ஆண்டு களுக்கு முன்பாகவே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்று குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத் தில் வாக்குச் சதவீதத்தை பாஜக வாங்கும் என பொய்யான செய்தியைப் பரப்புகின்றனர். முதலில் அவர்கள் 3 சத வீதத்தைத் தாண்டட்டும். பிரதமருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனா லேயே தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி திமுக குறித்து தரம் தாழ்ந்து பேசி யுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் சராசரியாக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.