அரியலூர், ஜூலை 27-
ஒன்றிய அரசின் தொழி லாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் அரி யலூர் மாவட்டத்தில் 13 இடங் களில் வேன் மூலம் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.
சம வேலைக்கு சம ஊதி யம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத சட் டத்தை மத்திய அரசு திரும் பப் பெற வேண்டும். விலை வாசி உயர்வைக் கட்டுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.
இந்த மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் அரியலூர் அண்ணா சிலை, கீழப்பழூ வூர், திருமானூர், ஏலாக் குறிச்சி, குருவாடி, கடம்பூர், விக்கிரமங்கலம், தா. பழூர், ஜெயங்கொண்டம், உடை யார்பாளையம் உட்பட 13 இடங்களில் நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.துரைசாமி, ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலாளர் மகேந்திரன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் விஜய குமார், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ராமசாமி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.