districts

img

நடமாடும் உணவு பகுப்பாய்வுக் கூட வாகனம் துவக்கி வைப்பு

மயிலாடுதுறை, ஆக.9 -

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் உணவு பாதுகாப்புத்  துறை சார்பில் உணவு தர  பரிசோதனை மேற்கொள்வ தற்கான நடமாடும் உணவு  பகுப்பாய்வுக் கூட வாக னத்தை மாவட்ட ஆட்சியர்  ஏ.பி.மகாபாரதி கொடிய சைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் மாவட்ட ஆட்சி யர் கூறுகையில், மயிலாடு துறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் உணவு  பொருட்களின் தன்மை  குறித்து பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்  படுத்தும் வகையில் நட மாடும் உணவுப் பகுப்பாய் வுக் கூட வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடமாடும் வாக னத்தின் மூலம், இம்மாதம் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களி டையே உணவு பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே பொது மக்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பவர்கள் தங்கள் பகுதிகளுக்கு இந்த வாகனம் வரும் சமயத்தில், உணவுப் பொருட்களில் தங்களுக்கு உண்டான சந்தேகங்களை கேட்டு, சோதித்து தெரிந்து கொள்ள லாம்” என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட  வருவாய் அலுவலர் மு.மணி மேகலை, உணவுப் பாது காப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.