districts

திருச்சி முக்கிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.29 - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த  வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி திரு வாரூர் மாவட்டம் முழு வதும் அரசு அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத்திலுள்ள உள்ள 46 அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்  எஸ்.செங்குட்டுவன் கண்டன உரையாற்றி னார். மன்னார்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் அமைப்பின் மாவட்டத் தலைவர் சு. சுதாகரும், திருத்துறைப் பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட் டப் பொருளாளர் ஏ.வி. சுப்பிரமணியனும் உரை யாற்றினர்.  பெரம்பலூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குமரி அனந்தன் தலைமை வகித்தார். வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செய லாளர் சரவணன் கோரிக் கைகள் குறித்து உரை யாற்றினார். மாவட்டச்  செயலாளர் சுப்பிர மணியன் நிறைவுரை யாற்றினார். வட்ட செய லாளர் ராஜதுரை நன்றி கூறினார்.

டிஆர்இயு பொது மகாசபை கூட்டம்

திருவாரூர், டிச.29 - டிஆர்இயு (சிஐடியு) சங்கத்தின் திருவாரூர் கிளை பொது மகாசபை  கூட்டம் சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத்  தலைவர் கே.பிரவீன்ராஜ் தலைமை வகித்தார். திருச்சி கோட்டச் செயலா ளர் ஆர்.கரிகாலன், கோட்டத் தலைவர் ஜி. சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திரு வாரூர் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தின் வாயிலாக 13 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், திருவாரூர் கிளைத் தலைவராக கே. பிரவின்ராஜ், செயலாள ராக எம்.நாகராஜன், பொருளாளராக ஜி. விஜயபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முதியவர் கைது

தஞ்சாவூர், டிச.29 -   சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை காவல்  துறையினர் வெள்ளிக் கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே களிமேடு பரிசுத்தம் நகரைச் சேர்ந்தவர் எம். மதிவாணன் (64). இவர் வியாழக்கிழமை 8 வயது  சிறுமி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன் கொடுமை செய்தாராம். இதுகுறித்து பாதிக்கப் பட்ட சிறுமியின் பெற் றோர் வல்லம் அனைத்து  மகளிர் காவல் நிலையத் தில் புகார் செய்தார்.  இதன் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மதிவாணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

நர்சிங் மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு உரிய விசாரணை நடத்த மாதர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, டிச.29 - கறம்பக்குடி அருகே நர்சிங் மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்ப வத்தில், உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டுமென மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்காகுறிச்சி ராஜா குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சௌமியா (20) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி யில் மூன்றாம் ஆண்டு நர்சிங் பட்டயப் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை வரை வீட்டில் இருந்த சௌமியா திடீரென காணாமல் போய்விட்டதாக உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில், மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதே ஊரில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.  இதுகுறித்த புகாரின் பேரில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்த வடகாடு போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சௌமியாவை யாரோ கொலை செய்து கிணற்றுக்குள் போட்டுவிட்டதாகவும், வழக்கை  கொலை வழக்காகப் பதிவு செய்து சம்பந்தப்பட்டோரை கைது செய்தால் மட்டுமே  சடலத்தைப் பெற்றுக் கொள்வோம் என குடும் பத்தினர் தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை உடற்கூறாய்வு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை  சௌமியாவின் உறவினர்கள் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் நடவ டிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி  அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.   இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா கூறுகையில், “நர்சிங் மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மிகவும்  வருந்தத் தக்கது. இது அப்பகுதியில் பெரும்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரோ கொலை செய்து கிணற்றில் போட்டு இருக்க லாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, போலீசார் தற்கொலை வழக்கு என்பதை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும். யார் தவறு இழைத்திருந்தாலும் அவர்களுக்கு உரிய  தண்டனையை காவல்துறை பெற்றுத் தர  வேண்டுமெனத்” தெரிவித்துள்ளார்.

ஆவின் பால், உபபொருட்கள் விற்க விற்பனை முகவர்கள் தேவை

ஆவின் பால், உபபொருட்கள் விற்க விற்பனை முகவர்கள் தேவை கரூர், டிச.29 - கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உப பொ ருட்கள் விநியோகம் செய்வதற்கு சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உபபொருட்கள் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், தோகைமலை, பரமத்தி, சின்னதாராபுரம் மற்றும் தென்னிலை பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பால் உபபொருட்கள் விற்பனை செய்திட சொந்த மாகவோ, வாடகை அடிப்படையிலோ இடவசதி மற்றும் பால்  பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு தேவை யான குளிர்சாதன வசதியும், உபபொருட்கள் விநியோகம் செய்ய வாகன வசதிகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சில்லறை விற்பனை முகவர்கள், விற்பனை செய்வதற்கு சொந்த கட்டிடம் அல்லது வாடகை கட்டிட இடவசதி உள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: ‘பொது  மேலாளர்’, கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிட்., தோரணக்கல்பட்டி, டி.செல்லாண்டிபாளையம் அஞ்சல், கரூர் - 639003. மேலும் விவரங்களுக்கு துணை மேலாளர் -  விற்பனை பிரிவு - 95859 75281, விற்பனை பிரிவு அலுவலர் கள்- 96983 77992, 97865 71615 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

அதிராம்பட்டினம் பகுதியில்  மரக்கன்றுகள் நடும் விழா

தஞ்சாவூர், டிச.29 -  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன் சார்பில் அர்டா வளாகத்தில்  மரம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதலமைச்சரின் கனவு திட்டமான பசுமையாக்குதல் திட்டத்தையொட்டி, தமிழக வனத்துறையினர் மரம் நடுதல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன்படி அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அமைப்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க நல்ல நிழல் தரும்  மரங்களை நட்டுள்ளோம். இந்த மரங்களில் இருந்து வெளிப்படும் ஆக்சிஜனில் இருந்து ஆண்டொன்றுக்கு 711.00 டன் மாசுகளை கட்டுப்படுத்தப்படும். நகர்ப்புற மயமாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும்” என்றார். இந்த விழாவில் சமூக ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து  கொண்டு பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.

2 ஆவது வி.ஆர்.எஸ் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது!
பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, டிச.29- பிஎஸ்என்எல் ஊழியர் சங்க 11 ஆவது திருச்சி மாவட்ட மாநாடு சனிக்கிழமை திருச்சி  தொலைதொடர்பு துறை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாநாட்டி ற்கு   பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத்  தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சங்க கொடியை மாவட்ட உதவி தலைவர்  ஆல்பர்ட் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட உதவி தலைவர் தனராஜன் வாசித் தார். ஆண்டறிக்கையை மாவட்டச் செய லாளர் சுந்தர்ராஜு  வாசித்தார். வரவு- செலவு அறிக்கையை மாவட்ட பொருளா ளர் கோபி சமர்ப்பித்தார்.  மாநிலத் தலைவர் பாபு ராதா கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநிலப்  பொருளாளர் அஸ்லாம்பாஷா, பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க மாநில  பொருளாளர் இளங்கோவன், தமிழ்நாடு தொலை தொடர்புத்துறை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முபாரக் அலி, உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 2 ஆவது வி.ஆர்.எஸ் திட்டத்தை அமல்படுத்த முயல்வதை ஒன்றிய  அரசு கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 4ஜி, 5  ஜி சேவைகளை பி.எஸ்.என்.எல் நிறுவ னத்திற்கு முழுமையாக ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும். 3 ஆவது ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தின் புதிய தலைவராக ஜி.கார்த்திகேயன், மாவட்டச் செயலாளராக கே.செல்வராஜ், பொருளாளராக கே.விஜய லெட்சுமி உள்பட 13 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் புதிய கல்வெட்டை மாநிலச் செயலாளர் ராஜு திறந்து வைத்து நிறை வுரையாற்றினார். முன்னதாக மாவட்ட உதவி செயலாளர் கார்த்திகேயன் வர வேற்றார். மாவட்ட உதவி செயலாளர் செல்வ ராஜ் நன்றி கூறினார்.

பேராவூரணி அரசு மருத்துவமனையில்  எம்எல்ஏ திடீர் ஆய்வு

தஞ்சாவூர், டிச.29 - பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ நா.அசோக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர்  அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, பேராவூரணி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நோ யாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாக வும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனரா என ஆய்வு செய்தார். தொடர்ந்து  ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தங்கியுள்ள நோயா ளிகளுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கப் படுகிறதா என கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.  அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து மருத்துவர் பாலா மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தியதோடு, காலிப்பணியிடங்கள் குறித்து கேட்டறிந்து, சுகாதாரத் துறை அமைச்சர், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார்.  தொடர்ந்து ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும், அரசு மருத்துவமனை புதிய கட்டட கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், ஒப்பந்ததாரரிடம் பணி களை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.  மருத்துவமனை பயன்பாட்டிற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தொடங்கி வைத்தார். ஆய்வின் போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். 

திருட்டு வழக்கில் தொடர்பு:  4 பேர் கைது 

மயிலாடுதுறை, டிச.29 - மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்பு டைய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் புதி தாக வாங்கிய வீட்டில் சில நாட்கள் வசித்து வந்து உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  அரும்பாக்கத்தில் உள்ள கார்த்திகேயன் வீட்டின் கதவு  உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும்  வெள்ளி பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து கார்த்தி கேயன் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் நாகவள்ளி மற்றும் காவல்துறையி னர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா தலை மையில் தனிப்படை அமைத்து வெள்ளிக்கிழமை தீவிர  விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரும்பாக்கம்  பகுதியில் தனிப்படை காவல்துறை வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த சொகுசு  காரை நிறுத்தினர். அதில் வந்த 3 பேர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.  அவர்களைப் பிடித்து, 3 பேரையும் பெரம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த தில் அரும்பாக்கத்தில் கார்த்திகேயன் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.  மேலும் அவர்கள் தென்காசி செங்கோட்டையை சேர்ந்த அஜ்மீர் (31), திருவாரூர் இளமங்கலத்தை சேர்ந்த  பிரதாப் (22), திருவாரூர் சேந்தங்குடியை சேர்ந்த கரண்  (22) மற்றும் தென்காசி செங்கோட்டையைச் சேர்ந்த அவரது கூட்டாளி இஸ்மாயில் (32) ஆகியோர் என்பதும்  தெரியவந்தது. இதில் அஜ்மீர் மீது நாகை, பேரளம், காரைக்கால், தென்காசி உட்பட பல்வேறு காவல் நிலை யங்களில் திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் இருப்ப தாக கூறப்படுகிறது.  அவர்களிடமிருந்து 19 பவுன் நகைகள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய ஒரு சொகுசு கார், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறி முதல் செய்து பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர். காவல் ஆய்வாளர் நாகவள்ளி மற்றும் காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் மயிலாடு துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர்.

தஞ்சாவூரில் மாணவர்களுக்கு குளிர்கால உண்டு உறைவிட பயிற்சி 

தஞ்சாவூர், டிச.29 -  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் “தலைமையே தகைமை” என்ற  தலைப்பில், 28 மாவட்டங்களைச் சார்ந்த பள்ளிகளுக்கான  5 நாட்கள் குளிர்கால உண்டு, உறைவிட பயிற்சி டிச.26  முதல் 30 வரை வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.  இதில், உதவித் திட்ட அலுவலர் ரமேஷ்குமார் வர வேற்றார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனை வர் வி.ரவிச்சந்திரன், பதிவாளர் முனைவர் பி.கே.ஸ்ரீவித்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாதவன்,  சுந்தர், அய்யாகண்ணு, சாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறி னார். இதில் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 11-ஆம்  வகுப்பு பயிலும் 140 மாணவர்கள் மற்றும் 28 மாவட்டங் களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கலைஞர் கைவினைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், டிச.29 -  கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இத்திட்டத்தின்கீழ் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோர் கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன்வலை தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள், தையல் வேலை, கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மை தயாரித்தல், படகுக் கட்டுமானம், பாசிமணி வேலைப்பாடுகள், துணி வெளுத்தல், தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் பயன்பெறலாம். மேலும், ரூ.3 லட்சம் வரையிலான பிணையற்ற கடன் உதவியும் தமிழக அரசால் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.50,000 வரை) மானியம் மற்றும் 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும்.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 11.12.2024 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, 35 வயது முதல் 55 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.   இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில், தஞ்சாவூர்-6 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04362-255318 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவோ அணுகலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக்க எதிர்ப்பு

தஞ்சாவூர், டிச.29-  பூதலூர் ஊராட்சியை பேரூராட்சி யாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதி  கிராம ஊராட்சியாக இயங்கி வருகிறது. இதனை பேரூராட்சியாக மாற்றும் முயற்சி கள் நடைபெற்று வருகின்றன. விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், சாதாரண  ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும்  பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக்கி னால் நூறு நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்படும். வரிகள் அதிகரிக்கப்படும். இதனால் கிராம மக்கள் பாதிக்கப்படு வார்கள் என இப்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பூதலூரில் சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று கே.ராச கோபால் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர்  சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில், “டிச.30 அன்று தஞ்சை யில் நடைபெறும் மக்கள் நேர்காணல் முகாமில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது எனவும், பூத லூரை பேரூராட்சியாக ஆக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஜன.8  அன்று பூதலூரில் பொதுமக்கள், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள், அமைப்பு களைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவது” எனத் தீர்மானிக்கப்பட்டது.