திருச்சிராப்பள்ளி, டிச.20 - திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திரு மணமேடு கொள்ளிடக் கரை படுகைப் பகுதி யில் 56 ஏக்கரில் மியா வாக்கி குறுங்காடு உரு வாக்கும் விழா நடை பெற்றது. விழாவிற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவராசு, லால்குடி தொகுதி எம்எல்ஏ சவுந்தரபாண்டி யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மரக்கன்று களை நட்டு அமைச்சர் நேரு கூறுகையில், இந்தியா விலேயே பெரிய அளவில், கொள்ளிடம் ஆற்றின் கரை படுகைப் பகுதியில் மியா வாக்கி முறையில் 56 ஏக்கர் பரப்பளவில் 8 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்து குறுங்காடு உருவாக்கும் பணி தொடங்கி வைக்கப் பட்டது. சுத்தமான காற்றினை சுவாசித்திடவும், நிலத்தடி நீர் மட்டம் நிலை நிறுத்தப்பட வும், அதிக அளவிலான பற வைகள் உள்ளிட்ட உயிரி னங்கள் வாழும் உயிர்ச்சூழல் மேம்படவும் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.