districts

img

சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட அமைப்பு பேரவை

மயிலாடுதுறை, அக்.13 - மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட அமைப்பு பேரவை நடைபெற்றது. கே.பி.மார்க்ஸ் தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர் சகோ.மூசா கருத்துரையாற்றினார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சந்திக் கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அமைப்பின்  பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்ட னர். பேரவையை வாழ்த்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் உரையாற்றினார். இதில் அமைப்பின் புதிய மாவட்டச் செய லாளராக கே.பி.மார்க்ஸ், தலைவராக எஸ். ஜான்சன், பொருளாளராக ஆசிக் ரஹ்மான்,  துணைத் தலைவர்களாக எம்.செல்லப்பா, அப்துல்மாலிக், ஹம்ரூத் பேகம், துணைச் செயலாளர்களாக டி.சிம்சன், சம்சுதீன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.