districts

img

கீழப்பழூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்

அரியலூர், டிச. 10 - கீழப்பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த  வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் அரியலூர் மாவட்ட முதல் மாநாடு தலைவர் மைதீன்ஷா (கன்வீனர்) தலைமையில் அரிய லூரில் நடைபெற்றது.  மாநாட்டில் ஜெ.வரபிரசாதம், எ. சௌரிராஜன், என்.ஏசுதாஸ், எ.தாஜீ தீன். எ.சூசை, எ.பல்சீஸ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். சிறுபான்மை  மக்கள் நலக்குழு மாநில பொதுச்  செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் வி.கல்யாண சுந்தரம் ஆகியோர், சிறுபான்மை இன  மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் ஆகியோர்  பேசினர்.  புதிய நிர்வாகிகள் தேர்வு  மாநாட்டில் அரியலூர் மாவட்டத் தின் புதிய தலைவராக சௌரிராஜன், செயலாளராக மைதீன்சா, பொருளாள ராக கன்னிமேரி, துணைச் செயலாள ராக வரப்பிரசாதம், துணைத் தலைவ ராக ரோசி, நிர்வாகக் குழு உறுப்பி னர்களாக நிசாமுதீன், பல்கீஸ், அரு ளப்பன், சூசை, ஆல்பர்ட், ஆரோக்கிய சாமி, ஆரோக்கியநாதன், இதயத் துல்லா, முல்லா, ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறுபான்மையின மக்கள் வாழும்  பகுதிகளில், சிறுபான்மை மாணவ- மாணவிகளுக்கு உயர் கல்விக்கூடங் கள் அமைக்க வேண்டும். திருமானூர் ஒன்றியம் பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். திருமானூர் ஒன்றி யம் கோக்குடி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் அதிகமாக இருப்ப தால், கால்நடைகளை பாதுகாக்க கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு சிறு  கடன் வழங்க அரசு விதிக்கும் நிபந்தனை களை தளர்த்த வேண்டும். கீழப்பழூர்  முதல் நிலை ஊராட்சியில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம் படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அரிய லூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான் மையின மக்களுக்கு இலவச வீட்டு  மனை, குடிமனை பட்டாவும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில், திருமானூர் ஒன்றியம் கீழ விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் 1977  ஆம் ஆண்டு 58 பேருக்கு பட்டா வழங்கப் பட்டது. தற்போது அவர்களுக்கு குடி மனை பட்டா வழங்காததால் தொகுப்பு  வீடு கட்ட முடியாத சூழல் உள்ளது. இந்த  58 பேருக்கும் குடிமனைப் பட்டா வழங்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.  இது தொடர்பான மனுவை, சிபிஎம் கீழவிழுப்பணங்குறிச்சி ஒன்றியக் குழு  உறுப்பினர் ஆரோக்கியநாதன், மாநில  பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் வி.கல்யாண சுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார்.