districts

img

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்!

மயிலாடுதுறை, மார்ச் 5 - மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திட, மத நல்லி ணக்கத்தை சீர்குலைப்பதை தடுத்திட,  இந்தியா அமைதி பூங்காவாக தொடர்ந்திட வலியுறுத்தி இரண்டு நாள்  பிரச்சார இயக்கம் நடைபெற்றது. செவ்வாயன்று ஆக்கூர் கடைவீதி யில் அமைப்பின் மாவட்டத் தலைவர்  செ.ஜான்சன் தலைமையில் பிரச்சாரம்  நடைபெற்றது. பிரச்சார இயக்கத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் துவக்கி வைத்தார். ஆக்கூர் முக் கூட்டு, தரங்கம்பாடி, பொறையார், ஆயப் பாடி, சங்கரன்பந்தல், வடகரை, கிளியனூர், எலந்தங்குடி ஆகிய பகுதி களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கே.பி. மார்க்ஸ், மாவட்ட பொருளாளர் ஆசிக்ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் டி.சிம்சன், மாவட்ட பொறுப்பா ளர்கள், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மயிலாடு துறை மாவட்ட பொறுப்பு செயலாளர் வீ.எம்.சரவணன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். பிரச்சாரத்தை வாழ்த்தி ஆக்கூர், வடகரை பகுதிகளைச் சேர்ந்த ஜமாத் தார்கள், முத்தவல்லிகள், ஆக்கூர் ஓரி யண்டல் பள்ளி தாளாளர் இக்ரம் ரசூல்  ஆகியோர் பேசினர்.