districts

img

அறந்தாங்கியில் மக்களுடன் முதல்வர் முகாம் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

 அறந்தாங்கி, டிச.28-   பொது மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை கடந்த 18ஆம் தேதி முதலமைச் சர் தொடங்கி வைத்தார்.  இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக் களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் வியாழனன்று நடைபெற்றது. இதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா முன்னிலை வகித்தார்.   இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை மாவட்ட கோட்டாட்சியர் முருகேசன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் உதயம் சண்முகம், அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் இரா. ஆனந்த், ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன். அரிமளம் ஒன்றிய குழு தலைவர் மேகலா முத்து, நகர மன்ற துணை தலைவர் முத்து, அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பாலு, அரிமளம் பேரூராட்சி தலைவர் மாரி கண்ணு முத்துக்குமார்,  மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.