districts

img

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு

கும்பகோணம், செப்.4 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  அரசு தலைமை மருத்துவமனையில், ரூ.4.38 கோடி மதிப்பில்  நோயாளிகளின் உதவியாளர்கள் காத்திருப்புக் கூடம்  மற்றும் டயாலிசிஸ் சிறப்பு வார்டு கட்ட டங்கள், ரூ.33.60 லட்சம் மதிப்பில் கட்டண சிகிச்சைப் பிரிவு கட்டடம், ரூ.22. 75 லட்சம் மதிப்பில் பட்டீஸ்வரம் ஆரம்ப  சுகாதார நிலையம், செவிலியர் குடி யிருப்பு (பாபநாசம் தொகுதி) கட்டடம் என மொத்தம் ரூ.4.94 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் மற்றும் ரூ.5.40 கோடி மதிப்பில் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கதிரியக்கத் துறைக் கட்டடம், சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் செவிலியர் ஓய்வு கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரி யங்கா பங்கஜம் தலைமையில் நடை பெற்ற விழாவில், தமிழக அரசு தலை மைக் கொறடா கோவி.செழியன், மாநி லங்களவை உறுப்பினர் சு.கல்யாண சுந்தரம், மயிலாடுதுறை தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, கும்பகோ ணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழ கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசுகையில், “தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.94 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தும், ரூ.5.40 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பணிகள் துவங்கப் பட்டுள்ளன. பொதுமக்கள் இம்மருத் துவமனையின் வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அவசர சிகிச்சைக்கு உதவி யாக, போக்குவரத்து இடையூறு இல்லா மல், கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் உள்ள அனைத்து வளாகத் திற்கும் தொடர்பு பாலங்கள் அமைத்து  தரப்படும்” என்றார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசு கையில், “கும்பகோணம் அரசு மருத்து வமனை புதிய பொலிவு பெற்றுள்ளது.  கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்களின் நலன் காத்திட சேவை யாற்றுகிறது இம்மருத்துவமனை. இங்கு பணியாற்றுகிற மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்டுகிறேன்” என் றார்.