அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.