புதுக்கோட்டை, ஆக.25 -
திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஆக.27) புதுக்கோட்டை வருகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிராஜன், திமுக நகரச் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 6,000-க்கும் அதிகமான இளை ஞர்களைப் பங்கேற்கச் செய்வது என்பது குறித்து ஆலோசிக் கப்பட்டது.