districts

img

கந்தர்வகோட்டை தொகுதியில் முடிவுற்ற பணிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, மார்ச்.7-  புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை முன்னிலையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழ மையன்று தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கன்னுக்குடிப்பட்டியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டி டம் மற்றும் கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டி டம் மற்றும் மட்டாங்கால் பகுதி யில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்டம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் புதி தாகக் கட்டப்பட்டுள்ள அங்கன் வாடி மையக் கட்டிடம் மற்றும் பெரியகோட்டை பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் தின்கீழ், ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலகம் கட்டிடம் உள்ளிட்ட முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.