புதுக்கோட்டை, ஏப்.4 - பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாய கம், சமூக நீதி இருக்காது என மாநில சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாள ருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வியாழக் கிழமை தீவிரப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், “பாஜக மீண்டும் ஆட்சி வந்தால் நாட்டில் சமூகநீதி, ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் என்கிற நடைமுறையையும் அழித்து விடுவார்கள். அதனால், இந்த தேர்த லில், பாசிச சக்திகள் மீண்டும் வந்துவிடாமல் இருக்க மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு, மகளிர் உரிமைத் தொகை, மகளி ருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி நாட் டிற்கே முன்னோடி முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மேலும், ஆலங்குடி பகுதி மாணவ-மாண விகள் பயன்பெறும் வகையில் அரசு கலை அறி வியல் கல்லூரி தொடங்கப்பட்டு, அதற்காக ரூ.15 கோடியில் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்கள் தொடர இந்தியாவில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு சிவகங்கை தொகுதியில் நீங்கள் ‘கை’ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார். பிரச்சாரப் பயணத்தில் சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி, வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இரா.சுப்புராம் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் பங்கேற்றனர்.