districts

img

தூத்தூரில் இடம் தேர்வு செய்து தொழிற்பேட்டை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை

பொன்னமராவதி, டிச.21 - பொன்னமராவதியில் வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மை துறை மூலம் பயனாளி களுக்கு இலவச மனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை ஆட்சி யர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி 208 பயனாளி களுக்கு ரூ.43.62 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், “பொன் னமராவதி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக் கைகளில் ஒரு சில கோரிக்கைகளான பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ‘குடிசை இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்’ என்பதே தமிழக முதல்வரின் லட்சியம். அந்த வகையில் வீட்டுமனை பட்டா  வழங்கி, அவர்களுக்கு புதிதாக வீடு கட்டு வதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர்  பகுதியில் இடம் தேர்வு செய்து, தொழிற் பேட்டை அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. பொன்னமராவதியில் உழவர் சந்தைக்கு இடம் தேர்வு செய்யப் பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. போதிய இடம் இருந்தால் பொன்ன மராவதி பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.  பொன்னமராவதி பேரூராட்சியை நக ராட்சியாக்க, அருகில் உள்ள ஊராட்சி பகுதி களை இணைத்து 30 ஆயிரம் மக்கள்தொ கையாக உருவாக்கி நகராட்சியாக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். அமரகண்டான் ஊரணியில் நடைபாதை அமைக்கப்பட்டு பூங்கா அமைக்கவும், ரூ.2.80 கோடி மதிப்பீட் டில் மேம்படுத்தவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது” என்றார். இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுத பாணி, வட்டாட்சியர் ஜெயபாரதி, ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, திமுக நகர  செயலாளர் அழகப்பன் ஆகியோர் பங்கேற்ற னர்.