திருச்சிராப்பள்ளி, டிச, 15- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் கிராமப்புற நகர்ப்புற மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனி யாண்ட்டி பழனியாண்டி சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமது, மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இந்த 3 ஆண்டு காலத்தில் மட்டும் திருச்சி மாநக ராட்சிக்கு மட்டும் திட்டப் பணி களுக்கு ரூ.2600 கோடி நிதி ஒதுக்கி தந்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் புதிய சாலைகள், காவேரி பாலத்தில் புதிய பாலம், அண்ணா சாலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை எலிவேட்டர் உயர் மட்ட பாலம், நீதிமன்றத்தில் இருந்து அல்லித்துறை வரை புதிய சாலை ஆகிய திட்டங்கள் வர இருக்கிறது.
இந்த விழா நடைபெறும் பகுதி யில் மகளிர் சுய உதவி க்குழு பெண்கள் எல்லாம் அமரும் வகையில் விரைவில் ரூ. 45 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்ட இருக்கிறோம். அதே போன்று ஆட்சியரின் முயற்சியால் மக்கள் பொழுதுபோக்கும் வகையில் ரூ.20 கோடியில் பறவைகள் சரணா லயம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மணப்பாறை மற்றும் மருங்கா புரி சுற்றுவட்டார பகுதி மக்களின் வசதிக்காக புதிதாக ரூ. 560 கோடியில் விரைவில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் தமிழகத்தில் 4 கோடியே 35 லட்சம் மக்களுக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்ட கூட்டு குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 107 திட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் 2000 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது. அதில் நகர்ப்புறத்தில் வசிக்கக் கூடிய மக்கள் 500 பேருக்கு பட்டா வழங்க இருக்கிறோம். ஏற்கனவே திருச்சி மேற்கு தொகுதியில் 1500 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதே போன்று மீண்டும் 1500 பேருக்கு இந்த ஆட்சியில் பட்டா வழங்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.