districts

img

தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை திருமணச் சட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் தோழர் சங்கரய்யா

திருச்சிராப்பள்ளி, நவ.18 - சுதந்திர போராட்டத் தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா நவம்பர் 15 அன்று காலமானார். அவரது  மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகை யில், அனைத்துக் கட்சிகள், வெகுஜன அமைப்புகள் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இரங்கல் கூட்டம் மற்றும்  மௌன அஞ்சலி ஊர்வலங்கள் நடை பெற்றன. திருச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் மற்றும் அனைத்து கட்சியினர்  கலந்து கொண்ட மௌன அஞ்சலி ஊர்வ லம் மற்றும் இரங்கல் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. கோட்டை காவல் நிலையம் அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சி யின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். இதில் மாநிலக் குழு  உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன், விடுதலை சிறுத்தை கள் கட்சி மண்டல பொறுப்பாளர் தமிழா தன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தேசிகன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் செல்வராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்டச் செயலாளர் ரெக்ஸ், மதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் டிடிசி சேரன், சமூக நீதி பேரவை சம்சு தீன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஹபிபுர்ரகுமான் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசுகையில், “தோழர் சங்கரய்யா  மாணவர் பருவத்திலேயே தன்னை பொதுவாழ்வில் ஈடுபடுத்தி கொண்டவர். சுயமரியாதை இயக்கத்தின் மீது தனிப் பட்ட பெரும் மதிப்பையும், மரியாதையும் கொண்டவர்.

1938ம் ஆண்டுகளில் இந்தி  திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது அன்றைக்கு ராஜாஜியை எதிர்த்து கருப்பு  கொடி காட்டியவர் தோழர் சங்கரய்யா. நம்முடைய மாநில உரிமைகள் எந்த  வகையில் பறிக்கப்பட்டாலும் அதற்காக  போராடியவர் மட்டுமல்ல, பொது வாழ்க்கையில் இன்றைக்கு நாம் எப்படி  இருக்க வேண்டும் என்று ஒரு வழிகாட்டி யாக திகழ்ந்து கொண்டிருப்பவர். பேரறி ஞர் அண்ணா தமிழ் ஆட்சிமொழி சட்டம்  கொண்டு வந்தபோது அதற்கு துணை யாக இருந்தது மட்டுமின்றி, சுயமரி யாதை திருமணங்கள் சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்ட போதும் அவருக்கு உறு துணையாக இருந்தவர் தோழர் சங்கரய்யா என்பதை நாடு அறியும். அத னால்தான் அவரை போற்றும் வகையில்  நம்முடைய முதலமைச்சர் தகைசால் தமிழர் விருது அவருக்கு வழங்கி பெரு மைப்படுத்தி உள்ளார். அவர் நமக்கு வகுத்து தந்த பாதையில் தொடர்ந்து நடைபோடுவோம்” என்றார். முன்னதாக திருச்சி காந்தி மார்க் கெட்டில் துவங்கிய மௌன அஞ்சலி ஊர்வலம் கோட்டை காவல் நிலையம் அருகில் நிறைவடைந்தது. இதில் சிபிஎம் உறுப்பினர்கள், வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினர், சிஐடியு, வெகுஜன அமைப்பினர், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, கோட்டத் தலை வர் மதிவாணன் உட்பட அனைத்துக் கட்சி யினர் பங்கேற்றனர்.

திருவாரூர்

சிபிஎம் மாவட்டக் குழு சார்பில், திருவா ரூர் நகராட்சி அலுவலகம் அருகி லிருந்து மெளன ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய ரயிலடி நிலையம் அருகே நிறைவு பெற்றது. அங்கு இரங்கல் கூட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். திருவாரூர்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன் உள்ளிட்ட தலைவர்கள் புகழுரை ஆற்றினர்.  திருத்துறைப்பூண்டியில் நடந்த பேரணி, புரட்சியாளர் அம்பேத்கார் சிலை  அருகிலிருந்து, கடைவீதி வழியாக பி.சீனி வாசராவ் நினைவு மண்டபத்தை வந்த டைந்தது. பின்னர் நடந்த இரங்கல் கூட்டத் திற்கு ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். முத்துப்பேட்டையில் நடந்த அமைதி ஊர்வலத்திற்கு நகரச் செயலா ளர் சி.செல்லத்துரை தலைமை வகித்தார்.  நன்னிலத்தில் நடந்த அமைதி ஊர்வ லத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் தலைமை வகித்தார்.  மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான் உள்ளிட்ட பலர் வீரவணக்கம் செலுத்தினர். வலங்கைமானில் நடந்த நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமை வகித்தார். குடவாசல் வி.பி.சிந்தன் நினைவு பேருந்து நிலையம் அருகே நடந்த இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி தலைமை வகித்தார். கொரடாச்சேரியில் நடைபெற்ற வீர வணக்க நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார்.  வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பாக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு வீரவணக்க அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி புகழஞ்சலி உரையாற்றினார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யத்தில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன் அஞ்சலி செலுத்தி துவக்கி வைத்தார். 

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகே செங்குந்தபுரம் கிராமம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து கட்சி யினர் சார்பில் அவரது படத்துக்கு புகழஞ்சலி  செலுத்தப்பட்டது. சிபிஎம் நிர்வாகிகள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பாபநாசம் பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் அவரது உருவப் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப் பட்டது. இதில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றியச் செயலர் முரளிதரன், ஏஐடியுசி மாநில நிர்வாகி தில்லைவனம் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளளர் எஸ். கவிவர்மன் தலைமை வகித்தார். கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்ன துரை எம்எல்ஏ., முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதைப்பித்தன்  உள்ளிட்ட பலர் உரையாற்றினர். ஆலங்குடியில் நடைபெற்ற புக ழஞ்சலி நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச்  செயலாளர் எஸ்.கவிவர்மன், திருவரங் குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல். வடிவேல், நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் பி.சுசீலா, எஸ்.பாண்டிச் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீர மங்கலத்தில் திருவரங்குளம் கிழக்கு  ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன்  தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கறம்பக்குடியில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், த.அன்பழகன், ஒன்றியச் செயலா ளர்கள் பி.வீரமுத்து, சக்திவேல் மற்றும்  மாவட்டக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி  செலுத்தினர். மணமேல்குடியில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணி யன், ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீரனூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ. ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், பேரூராட்சி கவுன்சிலர் எம்.மகாலெட்சுமி உள்ளிட் டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக் கோட்டையில் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.பொன்னுச்சாமி, டி.சலோமி,  ஒன்றியச் செயலாளர் டி.லெட்சாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னவா சல், அரிமளம், விராலிமலை ஆகிய இடங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் எம்.ஆர்.சுப்பையா, ஆர்.வி.ராமையா, மகா லிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் கி. ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.