districts

இயற்கையை பாதுகாத்தால்தான் பூமியை பாதுகாக்க முடியும்!

தஞ்சாவூர், அக்.6 -  தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணி வேளாண்மைத்  துறை மற்றும், ‘ழ’ பவுண் டேசன் சார்பில் இயற்கை விவசாய நெல் லீக் போட்டி துவக்க விழா மற்றும் தென்னை விவசாயத்திற்கு பாடுபட்ட முன்னோடி ஆ. பழனிவேலுக்கு பாராட்டு விழா ஆகியவை வியாழ னன்று மாலை பேராவூர ணியில் நடைபெற்றன.  திமுக தஞ்சை தெற்கு மாவட்ட விவசாய அணி  அமைப்பாளர் குழ.செ.அருள் நம்பி வரவேற்றார். சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை உரையாற்றினார்.  அப்போது அமைச்சர் பேசுகையில், “இயற்கை விவசாயிகளை பாராட்டு வதில் பெருமிதம் கொள் கிறேன். கார்பன் டை ஆக்சை டை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை தரக்கூடிய மகத்தான பணியை செய் கிறது விவசாயம், விவசா யத்தில் நாம் பயன்படுத் தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகள், உரத்தின் மூலம்  உணவு தானியங்கள் விஷ மாக மாறிக் கொண்டிருக் கின்றன.  இயற்கை விவசாயம் செய்யும் போது, அந்த உணவை விஷமற்றதாக மாற்றும் பணியை மேற் கொள்ளும் விவசாயிகளை பாராட்டுகிறேன். இயற்கை விவசாயத்தில் முதல் மூன்று  ஆண்டுகளுக்கு லாபத்தை  எதிர்பார்க்க முடியாது. அதன் பிறகு லாபம் உங் களைத் தேடி வரும். மாநில அரசும் ஒன்றிய அரசும் விவ சாயிகள் பயன்பெறும் வகை யில், வேளாண் விளை  பொருட்களை சந்தைப் படுத்த எலக்ட்ரானிக் நேச னல் அக்ரிகல்சுரல் மார்க்கெட் டிங் என்ற மின்னணு சம்பந் தப்பட்ட தேசிய அளவிலான இ-காமர்ஸ் சந்தையை ஏற்படுத்தியுள்ளது. இயற் கையை பாதுகாத்தால்தான் பூமியை நாம் பாதுகாக்க முடியும்” என்றார்.  நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏ வுமான கா.அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார், வேளாண்மை  இணை இயக்குநர் என்.கே. நல்ல முத்துராஜா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ‘ழ’ பவுண்டேசன் தலைவர் மருத்துவர் துரை.நீலகண்டன், நிறுவனர் கார்க்கி அசோக்குமார் விளக்க உரையாற்றினர்.  பாராட்டு  இதில், மூத்த தென்னை  விவசாயி ஆ.பழனிவே லுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய் யநாதன் பொன்னாடை அணி வித்து நினைவுப் பரிசு வழங்கினார். மேலும், ‘ழ’ பவுண்டேஷன் சார்பில்  இயற்கை விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட் டது. இதில், கூடுதல் சாகு படி செய்யும் விவசாயிக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.