சென்னை, ஏப்.13- புதுக்கோட்டை மாவட்ட முழு வதும் நெடுஞ்சாலை பணிகளுக் காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக சாலை ஓரங்களில் மரக் கன்றுகள் நடப்படும் என்று அமைச் சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தில் கந்தர்வ கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மா. சின்னதுரை,”கந்தர்வகோட்டை தொகுதிக்குள் செல்லும் நெடுஞ் சாலை துறையின் சாலையோரங் களில் மரக்கன்றுகளை நடவும் பரா மரிக்கவும் அரசு முன்வருமா? என் றார். இதற்கு பதில் அளித்த நெடுஞ் சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “கந்தர்வ கோட்டை தொகுதியை பொறுத் தளவில், மாநில நெடுஞ்சாலைகள் 33 கி.மீ., மாவட்ட முக்கிய சாலை கள் 115, இதர மாவட்ட சாலைகள் 279, கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் 11 என ஆக மொத்தம் 438 கிலோ மீட்டர் சாலைகள் நெடுங் காலத்துறையால் பராமரிக்கப் பட்டு வருகின்றன. அந்த சாலைகளில் ஏற்கனவே 2050 மரங்கள் உள்ளன மேலும் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் 2,762 மரங்கள் நடப்பட்டு மொத் தமாக 40,700 மரங்கள் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன” என்றார். தொடர்ந்து துணைக் கேள்வி எழுப்பிய சின்னதுரை,” புதுக் கோட்டை மாவட்டம் என்பது வறட்சி யான, பின் தங்கிய மாவட்டமாகும். வான்மழை பொய்த்து போன ஒரு மாவட்டமாகும். தொழில் வளர்ச்சி இல்லாத ஒரு பகுதி. இயற்கை சூழ லும் பாதிப்படைந்திருக்கிற கார ணத்தால் மரங்கள் முழுவதும் வெட் டப்பட்டு வெப்பமண்டல பகுதி யாக இருக்கிறது.
வான்மழை முற்றிலும் பொய்த்து விட்டது. கந்தர்வகோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லக் கூடிய சாலையின் இரு புறங்களி லும் புளியமரம், மா மரம், ஆலமரம் என்று நிறைய மரங்கள் இருந்தன. சாலைகள் புதுப்பிக்கப்பட்டதால் அந்த மரங்கள் முழுவதும் வெட் டப்பட்டு விட்டன. ஆகவே, புதுக் கோட்டை மாவட்டம் முழுவதும் மேம்படுத்தப்பட்ட அந்த சாலை ஓரங்களில் மரங்கள் நடுவதற்கும் அந்த மரங்கள் நடுகிற பகுதிகளில் மரக்கன்றுகளை பாதுகாப்பதற் கும் கூடுதல் முயற்சி எடுக்க வேண் டிய தேவை இருக்கிறது. அதனை அரசு செய்து கொடுக்குமா? என் றார். அமைச்சர் வேலு பதில் அளிக் கையில்,”சாலையில் விரிவாக்கம் செய்யும்போது மரங்களை வெட் டத்தான் செய்ய வேண்டி இருக்கி றது. ஆனால் ஒரு மரத்தை வெட்டி னால் பத்து மரங்கள் நட வேண்டும் என்ற முதலமைச்சரின் அந்த உன் னத திட்டத்தின் அடிப்படையில் சாதாரணமாக ஒரு மூன்று அடி இரண்டடி உயரத்தில் மரக்கன்று களை வைக்கிற போது கால்நடை களின் மூலமாக அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை உணர்ந்த காரணத்தால், ஆந்திராவின் ராஜ முந்திரியில் இருந்து வாங்கி வரக் கூடிய மரக்கன்றுகளை ஆறு அடிக்கு மேல் தான் நட வேண்டும் என்ற உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலையோரங்க ளில் மரங்களை நட்டு வருகிறோம். எனவே உறுப்பினரின் கோரிக்கை யை கவனத்தில் கொண்டு அவர் தெரிவித்த இரண்டு பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மரங்களை நடுவதற்கு அரசு முன் வரும்” என்றார்.
சாலைகள் சீரமைக்கப்படும்
மீண்டும் துணை கேள்வி எழுப் பிய சின்னதுரை,”புதுக்கோட்டை மாவட்டத்திலும் கந்தர்வகோட்டை யிலும் சாலைகள் மோசமாக பாதிப்பு அடைந்திருக்கிறது. குறிப் பாக ஆர்.ஆர். (மாவட்ட இதர) இராமுடையான் பட்டி- மின்னாத் தூர் சாலையும், மந்தனூரிலிருந்து கும்பம் பட்டி செல்லும் சாலையும், அண்டக் குளத்திலிருந்து பெரிய தம்பி உடையான் பட்டி செல்லும் சாலையும் ஒப்பந்தம் விடப்பட்டு கடந்த ஐந்து ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத னால் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. மாண வர்கள் பள்ளிக்கு கூட செல்ல முடி யாத சூழல் நிலவுகிறது. அந்த சாலைப் பணியை விரைந்து முடித்து கொடுக்கவும் கந்தர்வ கோட்டையில் ஓர் ஆய்வு மாளிகை அமைத்து தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண் டார். அமைச்சர் வேலு தொடர்ந்து பதில் அளிக்கையில், “இராமுடை யான் பட்டி- மின்னாத்தூர் சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும். 20223 ஆம் ஆண்டில் நெடுஞ்சா லைத்துறைக்கு 1.6 கிலோ மீட்டர் ஒப்படைக்கப்பட்டது. 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டு பரிசீனையில் உள்ளது. மந்தனூரிலிருந்து கும்பம் பட்டி செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது என்பதையும் இந்த சாலையில் தான் பேருந்து களில் பள்ளிக்கு போகிறோம் மாண வர்கள் செல்ல வேண்டும் என்பதை யும் உறுப்பினர் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். இந்த ஊராட்சி சாலை மாவட்ட இதர சாலையாக இரண்டாம் கட்டமாக தரம் உயர்த்துவதற்கு அரசு முயற் சிகளை மேற்கொண்டு வருகிறது விரைந்து அந்த பணிகளும் நடை பெறும். பொதுவாக மாவட்ட தலைநக ரங்களில் முக்கியமாக இருக்கிற நக ரங்களில் தான் விருந்தினர் மாளி கையில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக கட்டப்படுகிறது. இருந் தாலும் உறுப்பினரின் கோரிக்கை யை ஏற்று வருங்காலங்களில் நிதி நிலைமைக்கேற்ப அரசு முன்னு ரிமை அளிக்கும் என்றும் தெரிவித் தார்.