districts

img

பால் உற்பத்தியாளர்கள் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, அக்.18- பால் ஆரம்ப சங்கங்களை மூடுவதை கைவிட வேண்டும், பால் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றிய அலுவ லகம் முன்பு பால் உற்பத்தி யாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.சி.ராமசாமி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முகமது அலி, துணைத் தலைவர் சிவாஜி, மாவட்டத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர், கிருஷ்ணகிரி ஆவின் பொது மேலாளர் மற்றும் துணைப் பதிவாளர் பால்வளம் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.