தஞ்சாவூர், டிச.29 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் சம்பா, தாளடி நெற் பயிருக்காக மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள், காய்ந்த நெற்பயிர்களை மாவட்ட ஆட்சிய ரிடம் நேரில் காட்டி வலியுறுத்தினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், வெள்ளிக்கிழமை மாவட்ட அளவி லான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்கு நர் நல்லமுத்துராஜா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி டி. ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி கள் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி ஆகிய பருவத்தில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் போதிய மழையும் இல்லை, அதே நேரத்தில் மேட்டூ ரிலிருந்து தண்ணீரும் வரவில்லை. இத னால் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை உள்ளதால், மேட்டூரில் 70 அடி தண்ணீர் இருக்கும் நிலையில், உடனடியாக பாச னத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அதேபோல், பட்டுக்கோட்டை, பேரா வூரணி போன்ற பகுதிகளில் ஏரி, குளங்கள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகளின் சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. எனவே மேட்டூர் அணையை திறந்து, ஏரி, குளங் களை நிரப்ப வேண்டும். கல்லணைக் கால்வாய் ஆற்றில் நடை பெற்று வரும் சீரமைப்பு பணிகளை மீண்டும் துரிதப்படுத்த வேண்டும். இந்த பணியின் போது ஆற்றின் நடுவே சிமெண்ட் தளம் அமைக்காமல், இருபுற கரைகளை மட்டுமே பலப்படுத்த வேண்டும். இந்த திட்டம் தொடர்பான வெள்ளை அறிக் கையை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும்.
நெல் சாகுபடி செய்துள்ள விவசாயி கள் பலருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுக்க மறுக்கின்றனர். இதனால் விவ சாயிகள் தனியாரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி சாகுபடி செய்யும் நிலை உள்ளது. எனவே, கூட்டுறவுத் துறையினர் உடனடியாக விவசாயிகளுக்கு பயிர்க் கடனை அதிகளவில் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தட்கல் திட்டத் தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. தமிழக முதல்வர் நிக ழாண்டு திருச்சியில் 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க விழா நடத்திய நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்னும் எவ்வளவு இணைப்புகள் வழங் கப்படும் என்ற ஒதுக்கீடு இல்லாமல் உள்ளது. உடனடியாக தமிழக அரசு தஞ்சாவூர் மாவட்டத்தில், காத்திருப் போர் பட்டியலின் எண்ணிக்கை அடிப்ப டையில் உரிய விகிதத்தை பின்பற்றி விவ சாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்பு திட்டத்தில் விவ சாயிகளுக்கு பொங்கல் கரும்புடன், அச்சு வெல்லத்தையும் வழங்க வேண்டும். தற் போது மின் இணைப்பைக் கொண்டு அதி களவில் விவசாயப் பணிகள் நடைபெறு வதால், தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில் பேசிய விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, அவ்வப்போது மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் பதி லளித்தனர்.