தஞ்சாவூர், மார்ச் 24- தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், “அலைபேசி - அதீத பயன்பாடும் மனநல பாதிப்பும்- மீளும் வழிமுறைகள்” எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாணவர் மன்றம் இணைச் செயலாளர் எஸ்.இராஜலெட்சுமி வர வேற்றார். மாணவர் நலப்பிரிவு துணை இயக்குநர் பேரா சிரியர் எஸ்.கோமதி தொடக்கவுரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர், திரைக் கலைஞர், மருத்துவர் கே.சர்மிளா பங்கேற்று சிறப்பு ரையாற்றினார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.