districts

அதிகரிக்கும் சுற்றுச்சூழல் சீரழிவும் புற்றுநோய் அதிகரிப்பும்

நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

நாகர்கோவில், ஜன. 1- சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு ணர்வு மிக்க கேரளத்தின் மருத்து வக் கழிவுகள் குமரி மாவட்டத் திற்குள் சட்டவிரோதமாக கொண்டு  வரப்பட்டு நிலத்தடி நீரும் காற்றும்  மாசுபடுத்தப்படுகிறது. அவ்வப் போது வாகனங்களை பிடித்து  அபராதம் விதித்து காவல்துறையி னர் திருப்பி அனுப்பி விடு கின்றனர். மற்றொரு புறம் பாறை களை உடைத்து கல், பாறைப் பொடி, மணல் கடத்துவதும் சூழலை சீரழித்து வருகிறது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு ணர்வு தமிழக அரசால் முன்னெடுக் கப்பட்டாலும் அது வெறும்  பிரச்சாரமாகவே முடிந்துவிடு கிறது. சூழலை பாதுகாக்க வேண்டிய அதிகாரம் படைத்த  அரசு நிர்வாகத்தின் ஓட்டைகளை  பயன்படுத்தி சீரழிப்பு தொடர்கிறது. குமரி மாவட்டத்தில் புற்றுநோய் போன்ற  கொடிய நோய்களும் மருத்துவமனைகளும் பல்கி பெருகி வரும் நிலையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குமரி மாவட்டத் தில் கூடுதல் முக்கியத்தும் பெறு கிறது.

உயிரி மருத்துவ கழிவுகள்

மருத்துவமனையில் பயன் படுத்தித் தூக்கி எறியும் பொருட்க ளும், அறுவை சிகிச்சை செய்த உடல் உறுப்புகளும் மிகவும் அபாய கரமானவை. இவை ‘உயிரி மருத்துவ கழிவுகள்’ (Bio Medical  Waste) என்று அழைக்கப்படு கின்றன. கூர்மையான பொருட் கள், ரத்தம், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள், உடல்  பாகங்கள், ஊசிகள், ஊசி மருந்து பாட்டில்கள், மருத்துவர்கள் பயன் படுத்தும் கையுறைகள் ஆகிய மருத்துவம் சார்ந்த கழிவுகளை  பொது இடங்களில் கொட்டக் கூடாது. இத்தகைய கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இவற்றை புதைப்பதால் நிலத்தடி நீரும், எரிப்பதால் காற்றும் மாசு படுகிறன்றன. இத னால் விலங்குகளுக்கும், மனிதர் களுக்கும் நோய் தொற்று ஏற்படும்  ஆபத்து உள்ளது. பயோ மெடிக்கல் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-இல்  உருவாக்கப்பட்டன. மருத்துவக்  கழிவுகளை தரம் பிரித்து அனுப்பு வது இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகளில் ஒன்று. மருத்துவமனை யிலிருந்து வெளியேறும் குப்பை களை தரம் பிரித்து சேகரிப்பதற் காக சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு  என நான்கு நிறங்களில் நான்கு  குப்பைத் தொட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்டன. சிவப்பு குப்பைத் தொட்டியில் நெகிழி கழிவுகள், சிரிஞ்சி புட்டிகள்,  மஞ்சள் தொட்டியில் தொற்றுக் கழிவுகள், புண் கட்டிய துணி,  பஞ்சு போன்றவை. நீலத் தொட்டியில் கண்ணாடி பாட்டில் கள், காலாவதியான மருந்துகள், கருப்பு தொட்டியில் ஊசியில்லா சிரிஞ்சிகள், உலோகப் பொருட்கள் ஆகியவற்றை பிரித்து அந்தந்த தொட்டியில் போட வேண்டும். பயோ மருத்துவ கழிவு மேலா ண்மை விதிகளின்படி கழிவுகள் கையாளப்பட வேண்டும். மீறுபவர் களுக்கு 5 ஆண்டுசிறை, ரூ. 1 லட்சம்  அபராதம் விதிக்கப்படும்.   கேரளத்தில் இந்த விதிமுறை களை மீறி செயல்பட முடியாது என்பதால், இரவோடு இரவாக தமிழ்நாட்டுக்குள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. இங்கு  நிலங்களில் புதைத்து விடுவ தாக கூறப்படுகிறது. குமரி மாவட்டத் தில் அவ்வப்போது இத்தகைய வாகனங்கள் பிடிபட்டாலும் குறை வான ஒரு தொகையை வசூலித்து விட்டு திருப்பி அனுப்பிவிடுகின்ற னர்.

கழிவுகளை கொண்டுவர தமிழக வாகனம்

ஞாயிறன்று (டிச.31) அதி காலை சிறியரக சரக்கு வாகனம் ஒன்று நாகர்கோவில் கோட்டார் பகுதியில் துர்நாற்றத்துடன் சென்று  கொண்டிருந்தது. அப்பகுதி இளைஞர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கோட்டார்  காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட (TN 74 BC 7001) அந்த  வாகனம் கேரள மாநிலம் கொல்லத் திலிருந்து மருத்துவ மற்றும்  பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு  வந்தது தெரியவந்தது. மாநகர  சுகாதார அலுவலர் ராம்குமார்  ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கழிவுகளுடன் வாகனத்தை திருப்பி  அனுப்பினார். குமரி மாவட்டத்தில் இருந்து கனிமங்களை கேரளத்துக்கு அதிக அளவில் கடத்திச் செல்வதும், அங்கிருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவதும் முற்றி லும் தடுக்கப்பட வேண்டும். மக்க ளின் நலன் கருதி மாவட்ட நிர்வா கம் கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். குறிப்பாக மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் தலை யிட வேண்டும் என்பது சூழலியல் ஆர்வலர்களின் வலியுறுத்தல் மட்டுமல்ல பொதுமக்களின் கோரிக்கையுமாகும்.