districts

மருத்துவ பரிசோதனை முகாம்

பெரம்பலூர், ஜூலை 29 -

      சிஐடியு தொழிற்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில் பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

      நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற முகா மிற்கு, சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மக்களை தேடி மருத்துவ பணியா ளர்கள் முகாமில் பங்கேற்ற ஒப்பந்த தொழிலாளர் களுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பரிசோ தனை செய்து கொண்டனர். வாலிபர் சங்க நிர்வாகிகள் எஸ்.கே.சரவணன், வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.