districts

img

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டையில் மதிமுக சின்னம் அறிமுக விழா

புதுக்கோட்டை, மார்ச் 30 - திருச்சி தொகுதி மதிமுக வேட்பாள ருக்கு ஒதுக்கப்பட்ட ‘தீப்பெட்டி’ சின்னம் அறிமுக விழா புதுக் கோட்டை, கந்தர்வகோட்டை சட்ட மன்றத் தொகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது. நீண்ட இழுபறிக்குப் பிறகு திருச்சி  தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளருக்கு சனிக்கிழமை ‘தீப்பெட்டி’  சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சின்னம் ஒதுக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்தியா கூட்டணி கட்சியினர் ‘தீப் பெட்டி’ சின்னத்தை அறிமுகப்படுத்தி தொகுதி முழுவதும் விழாக்களை நடத்தினர். புதுக்கோட்டை பேருந்து நிலையத் தில் நடைபெற்ற அறிமுக விழாவிற்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ-க்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன், பெரியண்ணன் அரசு, திமுக நகரச் செயலாளர் ஆ. செந்தில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், மதி முக மாவட்டச் செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செய லாளர் இளமதி அசோகன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். கந்தர்வகோட்டையில் நடைபெற்ற அறிமுக விழாவிற்கு சட்டமன்ற உறுப் பினர் எம்.சின்னதுரை தலைமை வகித் தார். திமுக ஒன்றியச் செயலாளர்கள் எம்.பரமசிவம், எம்.தமிழய்யா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் கள் வி.ரெத்தினவேல், ஜி.பன்னீர்செல் வம், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலா ளர் வளத்தான், மதிமுக ஒன்றியச் செய லாளர் வைரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.