மயிலாடுதுறை, ஏப்.29 - மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் முதிய வர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை விரி வாக்கம் செய்து புதுப்பிக்கப் பட்டு வருகின்றன. மயிலாடு துறை ரயில் நிலையத்தில் இந்த பணி ரூ.21 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 2023 ஆக.6 அன்று தொடங்கிய மயிலாடுதுறை ரயில் நிலைய சந்திப்பு விரி வாக்கப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வரு வதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, இத்துடன் சேர்த்து தொடங்கப் பட்ட மற்ற ரயில் நிலை யங்களில் கட்டிடங்கள் எழும்பியுள்ள நிலையில், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அஸ்திவாரப் பணிகளே முழுமையடையா மல் உள்ளன. இதனால் பய ணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து மிகவும் சிரமப்படு கின்றனர். குறிப்பாக பணிகள் நடை பெற்று வரும் பகுதிகளை, கடந்து ரயில் நிலையத் துக்கு உள்ளே செல்லவும், வெளியேறவும் முதிய வர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். அப்பகு தியை கடந்து செல்ல முடி யாத நிலையில், மாற்று வழி யில் சென்றால் அதிக தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்கம் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.