மயிலாடுதுறை, ஜூன் 17 -
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாய முகாம் கடந்த ஜூன் 7 அன்று தொடங்கி வெள்ளி யன்று நிறைவடைந்தது. தரங்கம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை வகித்தார்.
தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள வருவாய் கிராமம் சார்பில் பொதுமக்களிடம், பட்டா பெயர் மாற்றம், பெயர் திருத்தம், வீட்டுமனை பட்டா கோருதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, ரேசன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மாற்றுத் திறனாளி உதவித்தொகை மற்றும் வேளாண்மைத்துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளை சார்ந்த மொத்தம் 1170 மனுக்கள் பெறப்பட் டன. அதில் 871 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 215 மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 194 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.