districts

img

பொறையார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை, ஏப்.27-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பட்ட மளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜான்சன்  ஜெயக்குமார் தலைமை வகித்தார். தமிழ்  சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் உதவித் தலைவர் ஸ்டான்லி தேவகுமார், ஆலோசனை சங்க செயலாளர் தங்கப்பழம்,  சபை குரு ஜான்சன் மான்சிங், திருச்சபை யின் மேல்நிலை கல்விக் கழக தலைவர் குணாளன் பாக்கியராஜ், ஆட்சி மன்ற உறுப்பி னர் தாமஸ் கென்னடி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் தங்க ராஜ் பியூலா வரவேற்றார். நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.இரவி, இளங்கலை, முது கலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என 950  மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் அலு வலக கண்காணிப்பாளர் சார்லஸ் பிரபா கரன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லூரி காசாளர் ஜூலியஸ் விஜயகுமார் நன்றி கூறினார்.