மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருமான மகாபாரதி, பாபநாசத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம் பதிவு தொடர்பான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், வட்டாட்சியர் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி, தேர்தல் துணைத் தாசில்தார் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.