மயிலாடுதுறை, ஜூன் 8-
மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி, மயிலாடு துறை, சீர்காழி, குத்தாலம் ஆகிய வட்டாட்சியர் அலு வலகங்களில் வருவாய் நிர் வாகம் மற்றும் பேரிடர் மேலா ண்மை துறை சார்பில் வரு வாய் தீர்வாயம் (ஜமாபந்தி) முகாம் புதனன்று துவங்கி வியாழனன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.
தரங்கம்பாடியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தலைமையில் நடை பெற்ற முதல் நாள் முகாமில் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட கஞ்சாநகரம், லட்சுமி நாராயணபுரம், மேலையூர், கருவாழக்கரை, கீழையூர், நடுக்கரை மேல்பாதி, நடுக் கரை கீழ்பாதி, கிடாரங் கொண்டான், தலையுடைய வர் கோயில்பத்து, மேலப் பெரும்பள்ளம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய வருவாய் கிரா மங்களின் கணக்குகளை சரி பார்த்து, கிராம நிர்வாக அலு வலர்கள், வருவாய் அலுவ லர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து வருவாய் கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு துறை களைச் சார்ந்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி யரிடம் வழங்கினர். மனுக் கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக் கப்படும் என்று தெரிவித்தார். இந்த முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த 63 மண் மனுக்கள் பெறப்பட்டன. மேலும் நில அளவை சங்கி லிகளை ஆய்வு செய்தார். இதேபோல், குத்தாலத் தில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்றது.
குத்தாலம் வட்டாட்சியர் இந்துமதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலங்குடி, திருமணஞ்சேரி, வானாதிராஜபுரம் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
ஜமாபந்தி நிகழ்ச்சியா னது ஜூன் 15 வரை நடை பெறும் என்றும், இதில் அனைத்து கிராம பொது மக்களும் தங்களுடைய குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என வும் ஜமாபந்தி அலுவலர் அம்பிகாபதி தெரிவித்தார்.