districts

img

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் (தரங்கம்பாடி), சீர்காழி, குத்தாலம்

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் (தரங்கம்பாடி), சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் ஆகிய ஊராட்சி  ஒன்றிய அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழங்கினர். கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் பாரதி, மாவட்டக் குழு உறுப்பினரும், புளியந்துறை முன்னாள் ஊராட்சி தலைவருமான அ.நேதாஜி, மாவட்டக் குழு உறுப்பினர் சி.வி.ஆர்.ஜீவானந்தம் உள்ளிட்டோர் உரையாற்றினார்.