புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூரில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரியில் கணிதம் வேடிக்கை நாள் நிகழ்ச்சி நடை பெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு கணிதம் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்துத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.