அரியலூர், மார்ச்.4- அன்னை லெட்சுமி அம்மாள் நினைவு தினத்தையொட்டி தா.பழூர் ஒன்றியம் வெண்மான்கொண்டான் அருந்ததியர் கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, மாவட்டப் பொருளாளர் ஜெ.துர்கா, மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சந்தானம். ஆர்.செக்தில்வேல், தா.பழூர் ஒன்றியச் செயலாளர். ஜெ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.