districts

img

புதுக்கோட்டையில் மாதர்கள் பிரச்சாரம்

புதுக்கேட்டை, செப்.25-  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கம்  சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை பிரச்சாரம் நடைபெற்றது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்ட மன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பொது விநியோத் திட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தில்லியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி செப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்பேரணியை விளக்கி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாதர் சங்கத்தின் சார்பில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதனொரு பகதியாக புதுக்கோட்டை நகரில் திங்கட்  கிழமை நடைபெற்ற பிரச்சாரத்தில் மாவட்டத் தலைவர்  எஸ்.பாண்டிச்செல்வி. மாவட்டச் செயலாளர் பி.சுசிலா,  துணைத்தலைவர் டி.சலோமி, பொருளாளர் ஜெ.வைகை ராணி மற்றும் நிர்வாகிகள் முத்துமாரி, நிரஞ்சனா, பரமேஸ்  வரி, சாந்தி, நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.