அரியலூர், ஜூன் 14-
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பேரவை கூட்டம் கட்சி அலுவல கத்தில் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மணிவேல் மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆண்டிமடம் கடைவீதியில் 3 மையங்களில் பழங்குடி யின பட்டியல், அருந்ததிய மக்களின் விழுப் புரம் மாநாட்டு தீர்மானத்தை விளக்கி பிரச்சா ரம் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.