பெரம்பலூர், பிப்.24 - பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் ஜன.20 முதல் மார்ச் 9 வரை வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பு பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் பிப்.24 அன்று நடைபெற்ற 6 ஆவது வார பயிற்சி வகுப்பிற்கு மின் ஊழி யர் மத்திய அமைப்பு முத்துசாமி தலைமை வகித்தார். ‘சாதி, வர்க்கம் ஒரு மார்க்சிய பார்வை’ எனும் தலைப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் என்.சிவகுரு கருத்துரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்ப லூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அகஸ்டின், மருத்துவர் சி.கருணாகரன், அ. கலையரசி, கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், சாலைப் பணியா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.சுப்ர மணியன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் எம்.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.