districts

மருதுபாண்டியர் கல்லூரியில் ஊக்கமளித்தல் கருத்தரங்கம்

தஞ்சாவூர், ஆக.22-  

       தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்லூரி மற்றும் தஞ்சா வூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில், “அணுகுமுறை உயரத்தை மாற்றுகிறது” என்ற தலைப்பில் ஊக்க மளித்தல் கருத்தரங்கம் நடைபெற்றது.

      இந்நிகழ்ச்சிக்கு, மருதுபாண்டியர் கல்வி நிறு வனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை  வகித்தார். சிறப்பு விருந்தினராக ஊக்கப் பயிற்சி யாளர் முனைவர் பி.ஆர்.சுபாஷ் சந்திரன் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக இயற்பியல் துறைத்தலை வர் பி.சரவணன் வரவேற்றார். வணிக மேலாண்மை துறை தலைவர் டி.வித்யா நன்றி கூறினார். இந்நிகழ் வில், இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.